Friday, December 19, 2014

Tamil Comedy

Just for fun






(நம்மாளு நல்லா போதையில.. நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டிலுள்ள ஆட்டை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் சமைத்து தடபுடலா விருந்து படைச்சுட்டாரு)
காலையில் வீட்டிற்கு வந்ததும் ஆடு அங்கேயே கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி...உள்ளே சென்று மனைவியிடம்..
கணவன் : (தயங்கிக்கொண்டே) ஆட்டுக்கு ஒண்ணும் ஆகலையா ?
மனைவி : என்னங்க... ஏன் ஆட்டுக்கு என்ன ஆகணும்?
கணவன் : இல்ல..ச்சும்மா கேட்டேன்.(மனதிற்குள்...ஆகியிருக்கனுமே எப்படி...?ம்..ம்..)
மனைவி : ஆட்டை விட்டு தள்ளுங்க! நைட்டுல இருந்து நம்ம நாய காணோமுங்க...போய் என்ன ஏதுன்னு பாருங்க....
(கேட்டவுடன் கணவனுக்கு மயக்கம்)




பாட்டி வட சுட்ட
கதை எல்லார்கும் தெரியும்!!!
ஆனா அது
உளுந்து வடையா? இல்ல
பருப்பு வடையா?
ஒரே கொழப்பமா இருக்கு மக்களே
ப்ளீஸ் தெரிஞ்சா சொல்லுங்க ...



ஒரு குட்டி கதை:
ஒரு குருவி பறந்து வரும் போது தெரியாம ஒரு கார் மேல மோதி மயங்கி விழுந்திருச்சி. அந்த கார் டிரைவர் அதை ஒரு கூண்டுல போட்டு அதுக்கு தண்ணி கொடுத்தார்.
மயக்கம் தெளிஞ்ச குருவி என்ன சொல்லுச்சி தெரியுமா..?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.அச்சச்சோ..!! நான் ஜெயில்ல இருக்கேன். அந்த கார் காரன் செத்துட்டானா..?



பிடிச்சா கமண்ட்
பண்ணுங்கள்..



No comments:

Post a Comment