Wednesday, December 17, 2014

Just for fun...






( புதிதாக பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் சேர வரும் மாணவியிடம், தனியார் பள்ளி நடத்தும் இண்டர்வியூ)
(கணக்கு)ஆசிரியை: உன் அம்மா ஐந்து சாக்லெட் வாங்கி 
வருகிறார்.அதில் ஒன்றை தம்பிக்கு கொடுத்தால்
உனக்கு என்ன வரும்?
மாணவி: கோபம் வரும்
ஆசிரியை: அட…இரண்டு மாங்காய் இருக்கு.ஒரு மாங்காய் சாப்பிட்ட பின்னால் மீதி என்ன் இருக்கும்
மாணவி: ஒரு கொட்டை, ஒரு மாங்காய்
(ஆங்கிலம்) ஆசிரியை: இப்படியெல்லாம், பதில் சொல்லக்கூடாது…சரி எ,பி,சி,டி எத்தனை எழுத்து?
மாணவி: நாலு…
ஆசிரியை: சனியனே… மொத்தம் எவ்வளவு?
மாணவி: “மொத்தம்” நாலு தான்…
ஆசிரியை:முட்டாள்…
மாணவி:அதுவும் நாலு எழுத்து தான்.
(அறிவியல்) ஆசிரியை :ஊர்வனவுக்கு ஒரு உதாரணம் கொடு
மாணவி:பல்லி
ஆசிரியை:இன்னொரு உதாரணம் கொடு
மாணவி இன்னொரு பல்லி
(தமிழ்) ஆசிரியை :நான் அழகா இருக்கேன்.. எந்த காலம்?
மாணவி: இறந்தகாலம்
(வர்லாறு) ஆசிரியை: நமக்கு கிழக்கே கடல்,தெற்கே கடல்,வடக்கு என்ன இருக்கு?
மாணவி:(திரும்பி பார்த்து) பள்ளிக்கூடத்து கதவு டீச்சர்…
(அனைத்து ஆசிரியர்களும் வடக்கு நோக்கி ஓடுகிறார்கள்…)

No comments:

Post a Comment