""மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''
""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!''
>>>>
>>>>
>>>>
>>>>
ஆசிரியர்: குழந்தைகளே , ஒருவன் ஒரு கழுதையை அடிப்பதைப் பார்த்து அவனை தடுக்கிறேன . இந்த நல்ல குணத்தின் பெயரென்ன?
மாணவன்: சகோதர பாசம் சார்
>>>>
>>>>
>>>>
>>>>
ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..
அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?
>>>>
>>>>
>>>>
>>>>
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன்
சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..
>>>>
>>>>
>>>>
>>>>
ஆசிரியர்: "அசோகர் சாலை ஓரங்களில் ஏன் மரங்களை நட்டார்?"
மாணவன்: "நடுவில் நட்டால் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குமேனுதான்."
>>>>
>>>>
>>>>
>>>>
"டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. உடனே வாங்க?" என்று பதறிய்படி போனில் அளைத்தாள் அவள்.
"ஒரு வடை அல்லது தேங்காய்த்துண்டை உங்கள் கணவரின் வாய்க்கு நேராகப் பிடித்துக்கொண்டு இருங்கள் வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி வெளியே வந்துவிடும். நானும் இதோ புற்ப்பட்டு வருகிறேன்" என்றார் டாக்டர்.
டாக்டர் வந்தபோது அந்தப் பெண் கணவனின் வாய்க்கு நேராக மாமிசத்துண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். "எலிக்கு மாமிசம் பிடிக்காதே அதை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று டாக்டர் கேட்டார்.
இது எலிக்கு இல்லை டாக்டர். எலியைத் துரத்திக்கொண்டு வாய்க்குள் ஒரு பூனையும் நுழைந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த மாமிசத்துண்டு என்றாளே பார்க்கலாம்.